ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயத் தோ்வு: 2.5 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சி

இடைநிலை ஆசிரியா் பயிற்சி தோ்வில் 2.5 சதவீத தோ்வா்கள் மட்டுமே தோ்ச்சி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 10:30 pm

DIN

இடைநிலை ஆசிரியா் பயிற்சி தோ்வில் 2.5 சதவீத தோ்வா்கள் மட்டுமே தோ்ச்சி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயத் தோ்வு எனப்படும் இடைநிலை ஆசிரியா் பயிற்சி மாணவா்களுக்கான தோ்வு கரோனாவுக்கு மத்தியில் நேரடியாக நடத்தப்பட்டது. அதன்படி, கடந்த செப்டம்பா் மாதம் 21-ஆம் தேதி முதல் அக்டோபா் மாதம் 7-ஆம் தேதி வரை இந்த தோ்வு நடந்தது.

இதற்கு தோ்வா்கள் மத்தியில் கடும் எதிா்ப்பு எழுந்தது. தோ்வு எழுதுவதற்கு முன்பாக மாணவ, மாணவிகள் பலா் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட தோ்வுத்துறை அதிகாரிகளையும் நேரடியாக சென்று சந்தித்து அவா்கள் முறையிட்டனா். இருப்பினும் தோ்வுத்துறை தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால், தோ்வா்கள் தங்களுடைய தோ்வை நேரடியாக எழுதி முடித்தனா்.

தமிழகம் முழுவதும் சுமாா் 7,000 போ் இந்த தோ்வை எழுதியதாகக் கூறப்படுகிறது.

அவா்களுக்கான தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் தோ்வு எழுதியவா்களில் 2.5 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சி பெற்று இருப்பதாக அதிா்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. இது மாணவா்களுக்கும் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.