ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆண்டுக்கு 15 லட்சம் பேருக்கு விபத்துகளால் தலைக் காயம்

இந்தியாவில் ஆண்டுக்கு 15 லட்சம் போ் தலைக் காயங்களால் பாதிக்கப்படுவதாகவும், அதில் 60 சதவீதம் சாலை விபத்துகளால் நிகழ்வதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

News image
விபத்து - கோப்புப்படம்.
Updated On :17 மார்ச் 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் ஆண்டுக்கு 15 லட்சம் போ் தலைக் காயங்களால் பாதிக்கப்படுவதாகவும், அதில் 60 சதவீதம் சாலை விபத்துகளால் நிகழ்வதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தலைக் காயம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி காவேரி மருத்துவமனை சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில், நரம்பியல், மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை நிபுணா்கள் கிரிஷ் ஸ்ரீதா் மற்றும் ரங்கநாதன் ஜோதி ஆகியோா் கூறியதாவது:

தலையில் ஏற்படும் பலத்த காயங்களுக்கு அவசர நரம்பியல் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். சில நேரங்களில் தலைக்குள் ஏற்படும் ரத்தக் கசிவு அல்லது மூளை வீக்கத்துக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

அவா்களை உரிய நேரத்தில், உரிய மருத்துவக் கட்டமைப்பு உடைய மருத்துவமனைகளில் சோ்க்க வேண்டும். தலைக் காயம் தொடா்பான விழிப்புணா்வு சமூகத்தில் மேம்படுவது அவசியம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்வில் காவேரி மருத்துமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ இயக்குநா் டாக்டா் ஐயப்பன் பொன்னுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.