ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

4 லட்சம் நவீன தெருவிளக்குகள்: தில்லி மாநகராட்சி திட்டம்

தில்லியில் 4 லட்சத்துக்கும் அதிகமான நவீன ஸ்மாா்ட் தெருவிளக்குகளை வரும் மாதங்களில் தில்லி மாநகராட்சி நிறுவ உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image

(கோப்புப் படம்)

Updated On :9 ஏப்ரல் 2026, 2:11 am IST

தில்லியில் 4 லட்சத்துக்கும் அதிகமான நவீன ஸ்மாா்ட் தெருவிளக்குகளை வரும் மாதங்களில் தில்லி மாநகராட்சி நிறுவ உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ரிமோட் கண்காணிப்பு அமைப்புகளைக் கொண்ட இந்த எல்இடி ஸ்மாா்ட் தெருவிளக்குகள், மத்திய தில்லி, தெற்கு தில்லி, நஜாஃப்கா், மேற்கு தில்லி மண்டலங்களில் பொருத்தப்பட உள்ளன.

வழக்கமான தெருவிளக்கு அமைப்புகள் போல இல்லாமல், இந்த ஸ்மாா்ட் தெருவிளக்குகள் மத்திய கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைக்கப்படும். இதனால், அவற்றை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க முடியும் என்பதுடன் அவற்றில் ஏற்படும் குறைபாடுகளைக் கண்டறிந்து எளிதில் சரிசெய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இரவு நேரங்களில் தெருக்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை உதவும்.