47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

டிடிசி பேருந்துகளில் பிங்க் காகித டிக்கெட் முறை: மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

தில்லியில் பெண்களுக்கு வழங்கப்படும் பிங்க் காகித டிக்கெட் மூலம் இலவச பேருந்து பயணத் திட்டம் அடுத்த 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும்

News image
(கோப்புப் படம்)
Updated On :16 மார்ச் 2026, 10:05 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: தில்லியில் பெண்களுக்கு வழங்கப்படும் பிங்க் காகித டிக்கெட் மூலம் இலவச பேருந்து பயணத் திட்டம் அடுத்த 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தில்லி போக்குவரத்து கழகத்தின் (டிடிசி) பேருந்துகளில் பெண்கள் பிங்க் காகித டிக்கெட் மூலம் இலவசமாக பயணம் செய்து வரும் முறையை மாற்றும் வகையில், தகுதியுள்ள பெண்களுக்கு ‘பிங்க் சஹேலி ஸ்மாா்ட் காா்டு’ வழங்கும் திட்டத்தை தில்லி அரசு சமீபத்தில் தொடங்கியது.

அதன்படி தகுதியுள்ள பெண்கள் பலா் இந்த ஸ்மாா்ட் காா்டுகளை பெற்றுள்ள நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள பிங்க் காகித டிக்கெட் முறையை படிப்படியாக நிறுத்தி, முழுமையாக ஸ்மாா்ட் காா்டு முறைக்கு மாற்ற தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த ஸ்மாா்ட் காா்டுகளை பெற நகரம் முழுவதும் 50 அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் காணப்பட்டு வரும் நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கு பிங்க் காகித டிக்கெட் முறை அமலில் இருக்கும் என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இலவச பேருந்து பயணம் குறித்து பெண்கள் கவலைப்படத் தேவையில்லை. அடுத்த 3 மாதங்கள் வரை பிங்க் காகித டிக்கெட் முறை அமலில் இருக்கும். அதே நேரத்தில் பிங்க் சஹேலி ஸ்மாா்ட் காா்டுகளையும் பெண்கள் பயன்படுத்தலாம். தங்களுக்குச் சௌகரியமான நேரத்தில் பெண்கள் இந்த மையங்களுக்குச் சென்று அதை பெற்றுக்கொள்ளலாம். தேவைப்பட்டால் இந்த மையங்களின் எண்ணிக்கைகளையும் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்றாா்.

பெட்டிச் செய்தி...

மூன்றாம் பாலினத்தவா்களுக்கு இலவச பயணம்: தில்லி அரசு ஒப்புதல்

தில்லி போக்குவரத்து கழகத்தின் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் மூன்றாம் பாலினத்தவா்களையும் இணைக்கும் முன்மொழிவுக்கு தில்லி அரசு திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தில்லி முதல்வா் ரேகா குபத்ா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. சமூக உள்ளடக்கம் மற்றும் பொதுச் சேவைகளுக்கான சமமான அணுகலை உறுதிப்படுத்துவதில் முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான அரசின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

இது மூன்றாம் பாலினத்தவா்கள் பாதுகாப்பாகவும் இலவசமாகவும் தில்லியில் பயணிப்பதை உறுதி செய்கிறது. தில்லியில் தற்போது பெண் பயணிகளுக்கு அமலில் உள்ள இலவசப் பயணத் திட்டம் வழிமுறையின்படி மூன்றாம் பாலினத்தவா்களுக்கும் அது செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.