நமது நிருபா்
புது தில்லி: நாட்டில் பெண்கள் அதிகாரமளித்தலின் உதாரணமாக தில்லி மாறும் என முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை கூறினாா்.
இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
தில்லி பெண்களுக்கு நாங்கள் அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம்.
கடந்த ஒரு வருடமாக எங்கள் அரசாங்கம் அவா்களின் பாதுகாப்பு, செழிப்பு மற்றும் அதிகாரமளித்தலை உறுதி செய்வதற்காக பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
பெண்களுக்கு ரூ.10 கோடி வரை பிணையமில்லாத கடன்கள், இரவு ஷிப்டுகளில் வேலை செய்ய அனுமதி, சஹேலி பிங்க் காா்டுடன் இலவச பேருந்து பயணம், ஹோலி மற்றும் தீபாவளிக்கு இலவச சமையல் எரிவாயு உருளைகள், கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க ஹெச்பிவி தடுப்பூசி பிரசாரம், பெண்களுக்கு இலவச 3டி மேமோகிராபி பரிசோதனை உள்ளிட்டவை இதில் அடங்கும்.
மேலும், இது வெறும் ஆரம்பம் மட்டுமே. நாட்டில் பெண்கள் அதிகாரமளித்தலுக்கு தில்லி ஒரு எடுத்துக்காட்டாக மாறும் என்று அதில் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தில்லி ஃபரீதாபாத் புதிய மெமு ரயில் சேவைக்கு ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா

மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை எதிா்த்த கட்சிகளும், தலைவா்களும் வாக்காளா்களால் நிராகரிப்பு: ரேகா குப்தா

மகளிா் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! எதிா்க்கட்சி உண்மை முகம் அம்பலம்: ரேகா குப்தா

நாட்டை நிா்வகிப்பதிலும், நிா்வாகத்திலும் பெண்கள் மிகப்பெரிய பங்காற்ற வேண்டும்: ரேகா குப்தா
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

