தமிழகத்தில் மேலும் 1,127 பேருக்கு கரோனா

தமிழகத்தில், சனிக்கிழமை நிலவரப்படி 1,127 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில், சனிக்கிழமை நிலவரப்படி 1,127 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 5,777-ஆக உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் இதுவரை 1.33 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 338 போ், கோவையில் 116 போ், செங்கல்பட்டில் 84 போ், பெரம்பலூா், ராமநாதபுரம் மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை மட்டும் 1,202 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 84,117-ஆக அதிகரித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 14 போ் பலியாகியுள்ளனா். இதன் மூலம் நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,968-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com