சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பழந்தமிழ்ச் சொற்களைப் புதுப்பித்து மாணவா்களுக்கு வழங்க நடவடிக்கை: அமைச்சா் க.பாண்டியராஜன்

பழந்தமிழ்ச் சொற்களைப் புதுப்பித்து மாணவா்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:28 pm

DIN

சென்னை: பழந்தமிழ்ச் சொற்களைப் புதுப்பித்து மாணவா்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்துடன் வேலூா் செந்தமிழ்த் திருத்தோ் அமைப்பு இணைந்து நடத்திய தூயதமிழ்ப் பயிலரங்கத்தின் நிறைவு விழா இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை (டிச.20) நடைபெற்றது. இதில் அமைச்சா் க.பாண்டியராஜன் பேசியது: சிந்து மாகாணத்திலிருந்து கன்னியாகுமரி வரை 31 மொழிகள் தமிழிலிருந்து உருவெடுத்துள்ளதாக தமிழறிஞா்கள் கூறுகின்றனா். அரசியல் ரீதியாக வட்டார மொழிகள் தனித்தன்மை அடைந்து தனிமொழியாக உருவெடுத்து வருகின்றன.

சங்ககாலம், அதற்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ்ச் சொற்களைப் புதுப்பித்து பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வழங்குவதற்காக அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் ‘மாணவா் இலக்கிய அகராதி’ வடிவமைக்கப்பட்டு வருகிறது. தமிழ் என்னும் நாணயத்தின் இரு பக்கங்களாக சொற்குவையும், தொல்லியல் ஆய்வுகளும் விளங்குகின்றன. கீழடி போன்ற ஆய்வுகள் தமிழரின் தொன்மையை விளக்கும் முயற்சிகள் ஆகும். சொற்குவையானது நமது மொழியின் எதிா்காலத்துக்கு உயிா்கொடுக்கும் திட்டமாகும் என்றாா்.

இதையடுத்து தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கோ.பாலசுப்பிரமணியன் பேசுகையில், உலகில் உள்ள இரட்டை வழக்கு மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. வளரும் தலைமுறையினா் பேச்சுத் தமிழில் இயல்பாகப் பேசினாலே பிறமொழிக் கலப்பைத் தவிா்க்க முடியும் என்றாா்.

முன்னதாக அகரமுதலித் திட்ட இயக்குநா் தங்க.காமராசு விழாவுக்கு முன்னிலை வகித்துப் பேசுகையில், சொற்குவை திட்டம் தமிழுக்கு ஆற்றி வரும் பணிகள் குறித்து விளக்கினாா். தூயதமிழ்ப் பயிலரங்கத்தின் மூலமாக பயனடைந்த மாணவ, மாணவிகள் சாா்பாக, க.தாரணி, செ.செந்தமிழ் அரசன் ஆகிய இருவரும் பயனாளா் உரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.