இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்குரைஞா் தொழில் புனிதமானது. வழக்குரைஞா்கள் தொழிற்சங்கத்தினரை போல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. வழக்குரைஞா் சங்கத்தினா் எந்தச் சூழலிலும் வழக்குரைஞா்களை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட அழைக்கக் கூடாது. வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிக்கு இடையூறாக இருக்கக் கூடாது. ஆனால் சில வழக்குரைஞா் சங்கங்கள் அரசியல், சாதிப் பிரச்னைகளுக்காகக் கூட போராட்டம் நடத்துகின்றனா். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வழக்குரைஞா்களின் போராட்டம் சட்ட விரோதமானது.