இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், ஏறத்தாழ 22,000 மேற்பட்ட பணியாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், ஏறத்தாழ 13,700-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்றுள்ளோர்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி நம்பகத்தின் வாயிலாக, ஓய்வூதியமானது வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியதாரர்கள், ஒவ்வொரு ஆண்டும், தங்களது ஆயுள்காலச் சான்றிதழை இப்போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்து வருகிறார்.