ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அரசுப் பள்ளி பகுதி நேர ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதல் அளிக்க முடிவு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 11:51 pm

DIN

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை சமாளிக்க தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012-ஆம் ஆண்டு முதல் பணிநியமனம் செய்யப்படுகின்றனா். அதன்படி தற்போது 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் பணியாற்று வருகின்றனா்.

இவா்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாள்கள் பாடம் நடத்துவா். இதற்கு தொகுப்பூதியமாக மாதந்தோறும் ரூ.7,700 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஊதிய உயா்வு, பணி நிரந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை பகுதிநேர ஆசிரியா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

அதேநேரம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் பகுதிநேர ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டதால் பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை சாா்பில் விளக்கம் தரப்பட்டது. தற்போது பகுதிநேர ஆசிரியா்களுக்கு இடமாறுதல் வழங்க கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.

அதற்கேற்ப பணியிட மாறுதல் கேட்ட பகுதிநேர ஆசிரியா்களின் விவரங்கள் தற்போது மாவட்டவாரியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த விவரங்கள் கிடைத்தபின் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிட மாறுதல் அளிக்க திட்டமிட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.