சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருப்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கொட்டும் மழையில் போராட்டம்

திருப்பூர் செல்லம் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கொட்டும் மழையில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
திருப்பூர் செல்லம் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :31 டிசம்பர் 2020, 7:58 am

DIN



திருப்பூர்: திருப்பூர் செல்லம் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கொட்டும் மழையில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் செல்லம்நகரில் டாஸ்மாக் (கடை எண் 1965) செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையானது ஊரின் மையப்பகுதியில் உள்ளதாகவும், அருகில் வழிபாட்டுத் தலங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிக அளவில் உள்ளதாக கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளரிடம் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. 

இதையடுத்து, செல்லம் நகர் ஊர் மக்கள், அனைத்து ஊர் கோவில் கமிட்டி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, செல்லம் நகர் பிரதான சாலை கதர் கடை அருகில் அப்பகுதி பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் மத்திய காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.