சென்னை விமானநிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமானநிலையத்தில் இருவேறு நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கிலோ தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.


சென்னை விமானநிலையத்தில் இருவேறு நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கிலோ தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்த காசர்கூடு பகுதியைச் சேர்ந்த அகமது சலீக் (22) மற்றும் ஸ்ரீஜித் (23) ஆகிய இருவரிடமும் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களது ஷூவில் மறைந்து வைக்கப்பட்டிருந்த ரூ.28 லட்சம் மதிப்பிலான 663 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானத்தில் வந்த மலேசியாவைச் சேர்ந்தப் பெண், ராஜா சலுஜா நாகராஜன் (37) என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 16.71 லட்சம் மதிப்புடைய 396 கிராம் எடைக் கொண்ட 4 தங்கச் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தங்கத்தின் எடை 1.06 கிலோ ஆகும். இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...