சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

போச்சம்பள்ளி அருகே மூன்று வீடுகளில் தொடர் திருட்டு

போச்சம்பள்ளி அருகே மூன்று வீடுகளில் நடைபெற்ற தொடர் திருட்டு சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 பிப்ரவரி 2020, 8:09 am

போச்சம்பள்ளி அருகே மூன்று வீடுகளில் நடைபெற்ற தொடர் திருட்டு சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சென்றாய பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி திருப்பதி (55). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு புதன்கிழமை அன்று வெளியே சென்றிருந்தார். இரவு வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 15000 திருடி சென்றுள்ளனர்.

செல்லம்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கதிர்வேல் (69), இவரின் வீட்டின் அருகே வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் சாம்பசிவம்(55). இவர்களின் வீட்டிற்கு புகுந்த மர்ம நபர்கள் 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 25 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இந்த சம்பவங்கள் குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.