திருச்சியில் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை வருகை தந்தார்.


திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை வருகை தந்தார். தொடர்ந்து, திருச்சி சங்கம் ஹோட்டலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்று உரையாற்றினார். மேலும், கிராம சபை விழிப்புணா்வு கருத்தரங்கிலும் கலந்து கொண்டு கட்சி நிா்வாகிகள் பணியாற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.
கட்சிக்கு ஏற்கெனவே சென்னை ஆழ்வாா்பேட்டையில் தலைமை அலுவலகமும், பொள்ளாச்சியில் இரண்டாவது தலைமை அலுலகமும் உள்ளது. இதன் தொடா்ச்சியாக 3ஆவது தலைமை அலுவலகம் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் பெல், கணேசபுரம் பகுதியில் உள்ள இந்த தலைமை அலுவலகத்தையும் மாலையில் கமல்ஹாசன் திறந்துவைக்கவுள்ளாா்.
இந்த நிகழ்ச்சிகளில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மண்டலங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...