ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

டி.கல்லுப்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எம்.சுப்லாபுரம் அருகே பாறைப்பட்டி பகுதியில் 2  இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காவலர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News image
Updated On :10 ஜனவரி 2020, 10:34 am

ராஜகுமாரன்

ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எம்.சுப்லாபுரம் அருகே பாறைப்பட்டி பகுதியில் 2  இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காவலர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

எம்.சுப்லாபுரம் அருகே பாறைப்பட்டி பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தேனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் காளீஸ்வரன், ஜெயந்த் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

மேலும், நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் கார்த்திக் பாண்டியும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். 

சுப்லாபுரம் அருகே பாறைப்பட்டி விளக்கு பகுதியில் இருவருடைய இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காவலர் கார்த்திக்பாண்டி மற்றும் கல்லூரி மாணவர்கள் காளீஸ்வரன் ஜெயந்த் ஆகிய மூவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டி. கல்லுப்பட்டி போலீஸார் மூவரின் உடலையும் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், விபத்து குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.