

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை காலை கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்த நிலையில் என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 16 பேர் முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, மேற்கொண்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லேசாக காயமடைந்தவருக்கு என்எல்சி மருத்துவமனையிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விபத்து குறித்து விசாரிப்பதற்காக பி.கே. மோஹபத்ரா [ஓய்வு பெற்ற இயக்குநர் (தொழில்நுட்பப் பிரிவு), என்டிபிசி] தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, என்.எல்.சி. 2-ஆவது அனல் மின் நிலையத்தின் பொது மேலாளர் கோதண்டம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.