தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த, கோவில்பட்டி நீதித்துறை நடுவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போலீஸார் ஒத்துழைக்க மறுப்பதாகவும், காவல் துறை அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்வதாகவும், தனது விசாரணையை விடியோ பதிவு செய்த தலைமைக் காவலர் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்றும் நீதித்துறை நடுவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளருக்கு மின்னஞ்சல் மூலம் அறிக்கை அனுப்பியிருந்தார்.