பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மதுரையில் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்

கரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்துள்ள ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

News image
வேலையிழந்துள்ள ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்
Updated On :6 ஜூலை 2020, 7:18 am

DIN

கரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்துள்ள ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடந்த இப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த  3 மாதங்களாக ஆம்னி பேருந்துகள் ஓடவில்லை. இதனால்  ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் தமிழகம் முழுவதும் 56 ஆயிரம் பேர் வேலையின்றி சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆகவே  ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும். அனைத்து ஓட்டுநர்களுக்கும் தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துவதாக ஓட்டுநர்கள் கூறினர். மேலும் உண்ணாவிரதம் இருக்கப்  போவதாக அறிவித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.