அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆலங்குடி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி புதன்கிழமை காலை உயிரிழந்தார்.

News image
Updated On :8 ஜூலை 2020, 6:16 am

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி புதன்கிழமை காலை உயிரிழந்தார்.

ஆலங்குடி அருகேயுள்ள மழையூரைச் சேர்ந்தவர் கருப்பையா(47). விவசாயியான இவர், புதன்கிழமை காலை, அவர் வளர்த்துவரும் நாயோடு, அப்பகுதியில் உள்ள வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது, பாதையில் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதை பார்க்காமல்  மின்கம்பியை மிதித்த கருப்பையா மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே  உயிரிழந்தார். அவரது நாயும் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தது.

தகவலறிந்து அங்கு சென்ற மழையூர் காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயியும், அவரது செல்லப்பிராணியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.