டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கடைமடைக்கு வராத காவிரி நீர்: பொதுப்பணித்துறையே காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு

நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் இதுவரை வந்து சேராததால் குறுவை சாகுபடிக்கு தயாராக இருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

News image
சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் காவிரி நீர் வராமல் வறண்டு கிடக்கும் பாசன வாய்க்கால்கள்
Updated On :27 ஜனவரி 2024, 4:54 pm

DIN

நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நீர் இதுவரை வந்து சேராததால் குறுவை சாகுபடிக்குத் தயாராக இருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டும், அதன் பின்னர் மூன்று நாட்களுக்குப் பின் கல்லணை திறக்கப்பட்டும் டெல்டா மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களுக்கு குறுவை சாகுபடி செய்ய காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடைமடைப் பகுதிகளில் உள்ள ஆறுகளில் ஆங்காங்கே குடிமராமத்து பணிகள் அவசர கோலத்தில் நடப்பதால் விவசாயத்திற்குத் தண்ணீர் வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

குடிமராமத்து பணிகள் முன்கூட்டியே தொடங்கி முடிக்காததால் காலம் தாழ்ந்து அவசர அவசரமாக கட்டும் பணிகள் தரமாக அமையுமா என விவசாயிகள் அச்சம் கொள்கின்றனர். தூர்வாரும் பணிகள் சில இடங்களில் மட்டுமே நடைபெறுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 8 வருடங்களாக குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகள் மீண்டும் உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு குறுவைக்கு நிலத்தை தயார்ப்படுத்தி வைத்துள்ள நிலையில், கடைமடைப் பகுதிகளுக்கு பொதுப்பணித் துறையினரின் மெத்தனத்தால்  தண்ணீர் வந்து சேருவதில் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இன்னும் இருபது நாட்கள் கழித்து கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் விட்டால் விதை விதைத்து நடவு பணிகள் செய்யும் நேரத்தில் மழைக் காலம் தொடங்கிவிடும் அப்போது விவசாயிகள் பெரும் சேதத்தைச் சந்திப்பார்கள் ஆகவே உரியக் காலத்தில் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீர்நிலைகளைத் தூர்வாரி தயாராக இருக்கும் நிலையில் தண்ணீர் காவிரியில் கடைசி கதவணை வரை சென்று பூம்புகார் கடலில் கலப்பதாகவும் கிளை ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வாரி ஏரி குளம் குட்டைகளில் தண்ணீர் சென்றடைந்தால் நிலத்தடி நீர் உயரும் குடிநீர் தட்டுப்பாடு குறையும். 

ஆகையால் அரசு போர்க்கால அடிப்படையில் குடிமராமத்து பணிகளைத் துரிதப்படுத்தி கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் வந்து சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.