நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கரோனா பாதிப்பால் நாகை மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு

நாகை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :8 ஜூலை 2020, 8:49 am

DIN

நாகை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

நாகை மாவட்டம் குத்தாலம்  மேல சாலையைச் சேர்ந்த ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களால் பாதிக்கப்பட்ட 62 வயது முதியவர் கடந்த மாதம் சளி, ஜுரம் ஆகிய உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் பின்னர் அவர் திருவாரூர் மருத்துவமனையில் கொரானா பரிசோதனை செய்து கொண்டார். இந்நிலையில் செவ்வாய் மாலை நெஞ்சுவலி வந்து முதியவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  இந்நிலையில், ஏற்கெனவே எடுத்துக்கொண்ட பரிசோதனை முடிவு வெளிவந்ததில், அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வட்டாட்சியர் ஜெனிதாமேரி, பேரூராட்சி செயல் அலுவலர் பாரதிதாசன் மற்றும் சுகாதாரத்துறையினர் இரவோடு இரவாக முதியவரின் வீட்டுக்குச் சென்று அவரது உடலைக் கைப்பற்றிப் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நள்ளிரவில் அடக்கம் செய்தனர்.

இதையடுத்து அவரது வீடு உள்ள பகுதி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் துக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.