கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாரசிட்டமால் வழங்கத் தடையில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்துகங்களில் வழங்கக் கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தமிழக அரசு

News image
பாரசிட்டமால் வழங்கத் தடையில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு
Updated On :14 ஜூலை 2020, 1:03 pm

DIN


மதுரை: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்துகங்களில் வழங்கக் கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பதில் அளித்துள்ளது.

மருந்தகங்களில் பாரசிட்டமால் மாத்திரையை வழங்க உத்தரவிடக் கோரி ஜோயல் சுகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், தமிழக அரசு தரப்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பாரசிடமால் மாத்திரை வழங்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அதே சமயம், மருந்தகங்களில் பாரசிட்டமால் மாத்திரையை வழங்க மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை என்றும் தெரிவித்திருந்தது.

தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று, எவ்விதத் தட்டுப்பாடும் இன்றி பாரசிட்டமால் மாத்திரை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரி ஜோயல் சுகுமார் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.