/

அகில இந்திய மருத்துவக் கல்வி இடங்கள் ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

அகில இந்திய மருத்துவக் கல்வி தொகுப்பில் 50% இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:44 pm

DIN


புது தில்லி: அகில இந்திய மருத்துவக் கல்வி தொகுப்பில் 50% இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களால் அகில இந்திய மத்திய தோகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில்  50% இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27%  ஒதுக்கீட்டை மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் தமிழக அரசு அந்த மனுவில் குற்றம்சாட்டியுள்ளது.

ஒவ்வொரு மாநிலமும், இளநிலை மருத்துவப் படிப்பில் 15% இடங்களையும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்களையும் மத்திய அரசின் தொகுப்புக்கு ஒதுக்குகின்றன.

இந்த அகில இந்திய தொகுப்பில் இருந்து 50% இடங்களை ஓபிசி, பிசி, எம்பிசி ஆகிய இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.