போடியில் ஏலக்காய் வர்த்தகம் தொடக்கம்

தேனி மாவட்டம், போடியில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் கடந்த மார்ச் 19-ம் தேதிக்குப் பின்னர், புதன்கிழமை ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் தொடங்கியது. 
போடியில் ஏலக்காய் வர்த்தகம் தொடக்கம்
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டம், போடியில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் கடந்த மார்ச் 19-ம் தேதிக்குப் பின்னர், புதன்கிழமை ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் தொடங்கியது. 

போடியில் பொது முடக்கம் காரணமாக  கடந்த மார்ச் 20- தேதி முதல் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தேனி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின் பேரில், தற்போது போடியில் மீண்டும் ஏலக்காய் வர்த்தகம் தொடங்கியது.

ஐ.டி.டி.சி.பி., ஏல நிறுவனம் சார்பில் நடைபெற்ற வர்த்தகத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 40 வியாபாரிகள் பங்கேற்றனர். இதில், கேரளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்க வரவில்லை. சமூக இடைவெளியுடன் வர்த்தகம் நடைபெற்றது.

இந்த வர்த்தகத்தில், மொத்தம் 18,956 கிலோ ஏலக்காய் விற்பனைக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், சராசரி தரம் கிலோ ரூ.1,850.89-க்கும், உயர் தரம் கிலோ ரூ.2,573-க்கும் விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com