விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடைகோரி வழக்கு 

ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

News image
Updated On :6 ஜூன் 2020, 3:33 pm

ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதா வீட்டை நினைவில்லமாக மாற்றுவது நீதிமன்ற அவமதிப்பு செயல் என குற்றஞ்சாட்டியுள்ளார். 

மேலும் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட காலத்தில் போயஸ் இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அண்மையில் அவசர சட்டம் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.