25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

காஞ்சிபுரம் அருகே கர்ப்பிணி அடித்துக் கொலை

காஞ்சிபுரம் அருகே கர்ப்பிணி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:46 pm

DIN

காஞ்சிபுரம் அருகே கர்ப்பிணி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் அருகே கிழம்பி புதூர் பகுதி கங்கை அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஹரி(25). இவரது மனைவி தேவி(21) இருவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

4 மாத கர்ப்பிணியாக இருந்து வரும் இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக கணவர் கடப்பாரையால் தேவியின் தலையில் ஓங்கி அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கணவர் ஹரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.