முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

திருவாரூரில் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் கோரி மனு

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூன் 2020, 2:18 pm IST

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டுக்குழுவின் சார்பில் மாவட்டச் செயலாளர் துரை அருள்ராஜன், மாவட்ட தலைவர் சு.பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் மனுகொடுக்கப்பட்டது. கரோனா ஊரடங்கால் சிறு மற்றும் குறுந்தொழில்கள் முடங்கிப்போயுள்ளன. இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாட்களைப் பெருமளவு வேலையிலிருந்து வெளியேற்றி வருகின்றன. இதனால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் பெருமளவு அதிகரித்து சமூகப்பிரச்னைகளுக்கு வித்திடும். 

ஆகவே தமிழகத்தின் நலன் கருதி சிறு மற்றும் குறுந்தொழில்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும் மேலும் சிறு குறுந்தொழில்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டுமெனவும் பணியாட்களை வேலை நீக்கம் செய்யும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க சென்றனர். மாவட்ட ஆட்சியர் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலர் பி.பொன்னம்மாளிடம் மனு வழங்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.