பண்ருட்டி அருகே காதல் ஜோடி தற்கொலை முயற்சி: காதலி பலி, காதலன் கவலைக்கிடம்

பண்ருட்டி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், காதலி உயிரிழந்தார். 
பண்ருட்டி அருகே காதல் ஜோடி தற்கொலை முயற்சி: காதலி பலி, காதலன் கவலைக்கிடம்

பண்ருட்டி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், காதலி உயிரிழந்தார். 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ரயில்வே காலணியில் வசித்து வந்தவர் பிளஸ் 2 மாணவி. அதேபகுதியைச் சேர்ந்தவர் சுப்புராயன் மகன் சந்தோஷ்குமார்(23) பட்டதாரி. இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தற்போது, கௌசல்யா 3 மாத கர்ப்பமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்தகவல் அறிந்த பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த காதலர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி இருவரும் புதன்கிழமை இரவு தனிமையில் சந்தித்து விஷம் குடித்துள்ளனர். பின்னர், சந்தோஷ்குமார் அவரது சித்தப்பா வேலு வீட்டிலும், கௌசல்யா அவரது வீட்டில் சென்று படுத்துவிட்டனர்.

வியாழக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் கௌசல்யா வாயில் நுரை தள்ளி மயங்கிக்கிடப்பதை குடும்பத்தினர் கண்டனர். பின்னர், அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிகிச்சை பலனின்றி கௌசல்யா உயிரிழந்தார். இதேபோல், விஷம் குடித்த சந்தோஷ்குமார் ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பண்ருட்டி காவல் ஆய்வாளர் க.அம்பேத்கார் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com