பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஆறுமுகனேரி அருகே இளைஞர் ஆற்றில் தவறி விழுந்து பலி

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி அருகில் கொட்டமலைக்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் பாலத்திலிருந்து ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். 

News image
Updated On :13 ஜூன் 2020, 9:15 am

DIN

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி அருகில் கொட்டமலைக்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் பாலத்திலிருந்து ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். 

காயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சேர்ந்த பீர்முகம்மது மகன் வருசை முகம்மது.18 வயதான இவர் இங்குள்ள கார் சர்வீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவர் வெள்ளிக்கிழமை மாலை நண்பர்களுடன் ஆறுமுகனேரி அருகிலுள்ள கொட்டமலைக்காடு பகுதியில் தாமிரபரணி ஆறும் கடலும் சேருமிடத்தில் உள்ள பாலம் மீது நின்று மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வருசைமுகம்மது நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து விட்டார். ஆறும் கடலும் சேரும் பகுதி என்பதால் நீர் சுழற்சி காரணமாகத் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இளைஞர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினரின் உதவியால் வருசைமுகம்மது உடல் மூன்று மணி நேரம் கழித்து மீட்கப்பட்டது. ஆறுமுகனேரி ஆய்வாளர் சாந்தி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.