ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஜெ. அன்பழகன் தொகுதி காலியானதாக அறிவிப்பு

​திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தொகுதி காலியானதாக அறிவித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2020, 12:39 pm

DIN


கரோனா பாதித்து உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தொகுதி காலியானதாக அறிவித்து சட்டப் பேரவைச் செயலகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஜூன் 10-ஆம் தேதி பலியானார்.

இந்த நிலையில் அவரது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவித்து பேரவைத் தலைவர் தனபால் மற்றும் பேரவைச் செயலர் ஸ்ரீனிவாசன் அறிவிக்கை வெளியிட்டுள்ளனர்.

தோ்தல் எப்போது: ஒரு சட்டப் பேரவைத் தொகுதி காலியான தேதியில் இருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்கும், காலியான தொகுதிகளுக்கு தோ்தல் நடத்துவதற்கான காலக்கெடுவுக்கும் இடைவெளி ஓராண்டுக்குக் குறைவாக இருந்தால் இடைத்தோ்தல் நடத்த தோ்தல் ஆணையம் உத்தரவிடாது.

அதே சமயம் தற்போது கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், இடைத் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.