சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கோவையில் கரோனாவில் இருந்து மீண்ட 11 பேர் வீடு திரும்பினர்

கரோனா பாதிக்கப்பட்ட புற்றுநோயாளி உள்பட இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் பூரண குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினர். 

News image
Updated On :16 ஜூன் 2020, 10:37 am

DIN

கரோனா பாதிக்கப்பட்ட புற்றுநோயாளி உள்பட இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் பூரண குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினர். 

கோவை, போத்தனூரை சேர்ந்த 49 வயது ஆண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஜூன் 9 ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தொண்டையிலிருந்து கட்டி அகற்றப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தொடர்ந்து இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே இவருக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் திரும்பச் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இருமுறை மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா பாதிப்பில்லை என்ற முடிவுகள் பெறப்பட்டதால் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இவருடன் சேர்த்து இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 11 பேர் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீட்டுக்குத் திரும்பினர். இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்பட மருத்துவர்கள் அனைவரையும் வழியனுப்பி வைத்தனர். தற்போது இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.