தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,141 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் குறித்த சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில், தமிழகத்தில் இன்று புதிதாக 2,141 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,373 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டோர் 2,091 பேர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 50.
மேலும், இன்றைய அறிவிப்பில் 49 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 625 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், இன்று மொத்தம் 1,017 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 28,641 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய தேதியில் மொத்தம் 23,065 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று 25,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இன்று 26,736 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 8,00,443 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.