குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சென்னையிலிருந்து அத்தாணி வந்த இளைஞருக்கு கரோனா அறிகுறி

சென்னையிலிருந்து புதுக்கோட்டை அத்தாணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

News image
Updated On :18 ஜூன் 2020, 11:26 am

DIN

சென்னையிலிருந்து புதுக்கோட்டை அத்தாணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தாணி பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சென்னையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குத் திரும்பி வந்தனர். 

இவர்களுக்கு சென்னையிலேயே கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இளைய சகோதரருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அத்தாணி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, சுகாதாரத் துறையினர் இளைஞரின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த பெற்றோர் மற்றும் சகோதரரைத் தனிமைப்படுத்தியதோடு சுற்றுப்புறப் பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். கரோனா பாதித்த இளைஞர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.