காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் 50வது பிறந்தநாளையொட்டி சேலம் மேற்கு மாவட்ட ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சார்பில் சங்ககிரியை அடுத்த ஐவேலி கிராமம், மாவெளிபாளையம், வயக்காடு பகுதியில் வயல்வெளியில் எளிய முறையில் பிறந்தநாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 50வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழாவிற்கு சேலம் மேற்கு மாவட்ட ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.எஸ்.ஜெய்க்குமார் தலைமை வகித்து சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட 250 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.
சங்ககிரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் பி சி மணி, நடராஜன், காசிலிங்கம், ராமமூர்த்தி, ரவி, சுப்ரமணி, செங்கோட்டுவேல், வழக்குரைஞர் மணிசங்கர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்திய}சீன ராணுவங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததையொட்டி அவர்களுக்கு சேலம் மேற்கு மாவட்ட ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டன.