அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ராமேசுவரத்தில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி வேலைநிறுத்த போராட்டம்

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களை மீட்கக் கோரி வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் மீனவர்கள் ஈடுபட்டனர். 

News image
Updated On :20 ஜூன் 2020, 11:23 am

DIN

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களை மீட்க வேண்டும், உயிரிழந்த மீனவர்களுக்கு 20 இழப்பீடு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் சனிக்கிழமை தொடங்கியது. துறைமுகத்தில் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தம், 5 ஆயிரம் மீனவர்கள் மற்றும் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.  

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 13ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்று நான்கு மீனவர்களுடன் மாயமான  ஹெட்டோ என்பவரது விசைப்படகு அதில் சென்ற மலர் வண்ணன் (55), ரெஜின்பாஸ்கர் (43) ஆஸ்டின்(19) என்ற சுஜிந்திரா, ஜேசு(60) மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தநிலையில், ஜேசு என்ற மீனவர் கோட்டை பட்டணம் மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இதில் ரெஜின்பாஸ்கர் உடல் வெள்ளிக்கிழமை கோடியாக்கரை கரைக்கு மீட்டனர். ஊடல் என்று கூறி ராமேசுவரம் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, சனிக்கிழமை அதே பகுதியில் ஆஸ்டின்(எ)சுஜிந்திரா உடல் மீட்டனர். மேலும் மலர் வண்ணன் உடலைத் தொடர்ந்து மீனவர்கள் தேடி வருகின்றனர்.  

இந்தநிலையில், மாயமான மீனவர்களை மீட்க வேண்டும், உயிரிழந்த மீனவர்களுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். படகு மூழ்கி உயிரிழக்கும் மீனவர்கள் விரைந்து சென்று மீட்கும் வகையில் விபத்து மீட்பு 108 ஆம்புலனஸ் படகு உருவாக்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கி உள்ளனர்.

இதனால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மீனவர்கள் மற்றும் சார் தொழிலாளர்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.