தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

'மதுரை, தேனியில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்'

மதுரை, தேனி ஆகிய 2 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2020, 2:34 pm

DIN

மதுரை, தேனி ஆகிய 2 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகக் கரோனா தீநுண்மி தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் பொது முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் பொது முழு முடக்கம் அமலில் உள்ள மதுரை, தேனி ஆகிய 2 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி இவ்விரு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய ஜூன் 24 முதல் ஜூலை 14 வரையிலான மின் கட்டணத்தை ஜூலை 15ஆம் தேதி செலுத்தலாம் என மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.