டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அமைச்சர் நிகழ்ச்சியில் அரசு கட்டடம் இடிந்து விழுந்தது: நூலிழையில் தப்பிய அமைச்சர்

அமைச்சர் நிகழ்ச்சியில் அரசு கட்டடம் இடிந்து விழுந்ததில் அமைச்சர் நூலிழையில் தப்பினார். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:07 pm

DIN

அமைச்சர் நிகழ்ச்சியில் அரசு கட்டடம் இடிந்து விழுந்ததில் அமைச்சர் நூலிழையில் தப்பினார். 

மதுரை செல்லூர் ரவுண்டானா பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டிருந்த ரவுண்டானா கட்டிடத்திறப்பு விழாவில் கபடி வீரர்களை நினைவுபோற்றும் கபடி சின்ன சிலை நிறுவுவது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் 40லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த ரவுண்டானா கட்டிடத்தில் மேல் நின்று மக்கள் முன்பாக பேசியபோது திடிரென கட்டடம் மேல் இருந்த டைல்ஸ்கள் அனைத்தும் உடைத்து மிகப்பெரிய பள்ளம் உருவானது. 

இதனால் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் பதற்றமடைந்து நிலையில் நூலிழையில் உயிர்தப்பினார். இதனையடுத்து அவசரவசரமாக காவல்துறையினர் மற்றும் தொண்டர்கள் மீட்டு அழைத்துசென்றனர். இதனையடுத்து நிகழ்ச்சியை பாதியிலயே ரத்து செய்துவிட்டு அமைச்சர் புறப்பட்டு சென்றார். அரசு நிதியில் கட்டப்பட்ட கட்டடம் ஆய்வின்போதே இடிந்துவிழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அரசு பணியில் ஊழல் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.