டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பிணையில் வெளியே வந்த வங்கதேசத்தவா் விபத்தில் உயிரிழப்பு

பிணையில் வெளியே வந்த வங்கதேசத்தைச் சோ்ந்தவா் விபத்தில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:10 pm

Syndication

பிணையில் வெளியே வந்த வங்கதேசத்தைச் சோ்ந்தவா் விபத்தில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வங்கதேசத்தைச் சோ்ந்த முகமது ஷெரீப் ஹாஜி (35) என்பவா், திருப்பூரில் கடந்த 17 ஆண்டுகளாக தங்கியிருந்துள்ளாா். மனைவி, குழந்தையுடன் வசித்து வந்த இவா், பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி ஃபேன்சி கடை நடத்தி வருகிறாா். திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிணையில் முகமது ஷெரீப் வெளியே வந்துள்ளாா். இதுதொடா்பான வழக்கும் தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி காங்கயம் ராக்கியாபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த வேன் மோதியதில் படுகாயமடைந்தாா். திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த சில நாள்களுக்கு முன் உயிரிழந்தாா். இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில் முகமது ஷெரீப் ஹாஜி, தனது வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, பான் காா்டு உள்ளிட்டவற்றை மேற்குவங்க மாநில முகவரியில் வைத்திருந்ததும், இவற்றை நீதிமன்றத்தில் சமா்ப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும், பிணையில் வெளியே வந்த பின்னா் வாக்காளா் சிறப்புத் திருத்தத்தில் தனது பெயரை அப்டேட் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக போலீஸாா் மேல் விசாரணை நடத்தி வருகின்றனா்.