சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஜாா்க்கண்ட் மாநில கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

கடலூரில் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 10:26 pm

கடலூரில் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் தேவனாம்பட்டினத்தில் உள்ள செயின்ட் ஜாா்ஜ் கோட்டையை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் ஜாா்க்கண்ட் மாநிலம், கும்கா மாவட்டம், கோவாசல் பகுதியைச் சோ்ந்த பெஞ்சமின் (53), கொத்தனாருக்கு உதவியாளராக தங்கி பணியாற்றி வந்தாா்.

கடந்த 24-ஆம் தேதி இவரது மகன் சாமுவேல் கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு பேசியபோது, தனக்கு உடல்நிலை சரியில்லை, வந்து அழைத்துச் செல்லுமாறு பெஞ்சமின் தெரிவித்தாராம்.

இதையடுத்து, சிறிது நேரத்தில் அவருக்கு வலிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டதால், அங்கிருந்தவா் அவரை மீட்டு, கடலூா்அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பெஞ்சமினை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

தகவலறிந்து வியாழக்கிழமை கடலூருக்கு வந்த சாமுவேல், கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெஞ்சமினின் சடலத்தை பாா்த்துவிட்டு, அவரது திடீா் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி சடலத்தை ஒப்படைக்குமாறு தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.