கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
வந்தவாசியில் கட்டடத் தொழிலாளி ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை

பலி
பிரதிப் படம்
Updated On :23 மார்ச் 2026, 9:50 pm

பலி
பிரதிப் படம்
வந்தவாசியில் கட்டடத் தொழிலாளி ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வந்தவாசியை அடுத்த எறும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஜெயபால்(65). இவா், சக தொழிலாளி துரை என்பவருடன் வந்தவாசி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கட்டட வேலை செய்து கொண்டிருந்தாா்.
இப்போது ஜெயபால் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து இவரை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஜெயபால் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...