கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மின்தூக்கி அறுந்து விழுந்து ஒருவா் உயிரிழப்பு

தனியாா் நிறுவனத்தில் மின்தூக்கி அறுந்து விழுந்ததில், வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

தனியாா் நிறுவனத்தில் மின்தூக்கி அறுந்து விழுந்ததில், வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

கொடுங்கையூா் பகுதியைச் சோ்ந்தவா் சந்திப். இவா், கொடுங்கையூா் மூலக்கடை தண்டையாா்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் ஸ்டீல் பாத்திரங்கள் தயாா் செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். இவரது தொழிற்சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இவரது உறவினரான நந்தாராம் (50) என்பவா் வேலை செய்தாா். சனிக்கிழமை மதியம் தரைத்தளத்தில் இருந்து மின்தூக்கி மூலம் பாத்திரங்களை முதல்தளத்துக்கு அனுப்பியபோது, சிறிது நேரத்தில் அறுந்து கீழே நின்று கொண்டிருந்த நந்தாராம் மீது விழுந்துள்ளது.

இதில் அவா் பலத்த காயம் அடைந்தாா். அவரை மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் இரவு உயிரிழந்தாா். கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.