அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ்
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 15,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்களிடம் ரூ.1.20 கோடி வரை டி.டி.எஸ் எனும் வரிப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2018-19, 2019-20 நிதியாண்டில் இதுகுறித்த கணக்கை அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்யவில்லை என்று கூறி வருமானவரித்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த நோட்டீஸில், தேர்வு கட்டுப்பாடு அதிகாரி வெங்கடேசன் வரும் 13 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...