பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆம்பூர் அருகே காடுகளுக்கு தீ வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது

ஆம்பூர் அருகே காடுகளுக்கு தீ வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :30 மார்ச் 2020, 7:39 am

DIN

ஆம்பூர் அருகே காடுகளுக்கு தீ வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம்பூர் வனச்சரகத்தில் மேற்குப் பகுதியில் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்ட கௌண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக் காடுகளை ஒட்டி காரப்பட்டு காப்பு காடுகள் உள்ளன. கடந்த சில தினங்களாக இந்த காரப்பட்டு காப்புக்காடு பகுதியில் தீ வைப்பு சம்பவங்கள் நடந்து வந்தன. திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் ஆம்பூர் வனசரகர் மூர்த்தி தலைமையில் வனவர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் வனக்காவலர்கள் அன்றாடம் காப்புக் காடுகள் பகுதியை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காரப்பட்டு காப்புக் காடுகள் பகுதிகளான முனியப்பன் ஏரி, எம்.ஜி.ஆர் நகர் பகுதி மற்றும் மாதகடப்பா பகுதிகளில் மீண்டும் காடுகள் கொழுந்து விட்டு எரிந்து வந்தது. கொழுந்துவிட்டெரியும் காடுகள் பகுதிக்கு மாவட்ட வன அலுவலர் முருகன், ஆம்பூர் வனசரகர் மூர்த்தி, வனவர் சம்பத்குமார் வனக்காப்பாளர்கள் விசுவநாதன், செந்தில், மகேஷ் வனக்காவலர் அசன் நிசாருதீன் ஆகியோர் தீப்பற்றி எரிந்து வரும் பகுதிகளை அணைக்கும் முயற்சியிலும், தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

அப்போது அரங்கல்துருகம் அடுத்த மத்தூர்கொல்லை பகுதியின் அருகே தேவுடு கானாறு வனப்பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் பதுங்கி இருப்பதை கையும் களவுமாக பிடித்தனர். அவரை விசாரணை செய்ததில் சின்ன கொல்லக்குப்பம் குப்பத்தை சேர்ந்த அபிமன்னன் த/ பெ சின்னராஜ் .வயது 40 என்பதும் , காடுகளுக்கு தீ வைத்துவிட்டு தீயின் வெப்பம் தாங்காமல் ஓடிவரும் வனவிலங்குகளை வேட்டையாட பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. காப்புக் காட்டில் துப்பாக்கியுடன் பிடிபட்டவரை ஆம்பூர் வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக ஆம்பூர் வனச்சரகத்தில் சாரங்கல், பாலூர், வெங்கிளி, ராள்ளக்கொத்தூர், காட்டு வெங்கடாபுரம், மாதகடப்பா பகுதிகளில் காப்புக் காடுகள் தீப்பற்றி எரிந்து வருவதால் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறையினர் காப்பு காடுகள் பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து, தீ வைப்பு சம்பவங்கள் ஈடுபடுவோர் மீதும், வன விலங்குகளை வேட்டையாடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.