வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மதுக்கடை திறப்பை கண்டித்து பெண்கள் நூதனப்போராட்டம்

கரோனா பரவல் கடுமையாக உள்ள நிலையில் தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து விற்பனை செய்வதைக் கண்டித்து திருநகரில் பெண்கள் நூதன போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். 

News image
Updated On :7 மே 2020, 1:38 pm

கரோனா பரவல் கடுமையாக உள்ள நிலையில் தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து விற்பனை செய்வதைக் கண்டித்து திருநகரில் பெண்கள் நூதன போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். 

மக்கள் பாதை மகளிர் பிரிவு சார்பில் திருநகர் முதலாவது பேருந்து நிறுத்தம் பகுதியருகே உள்ள அரசு மதுபானக் கடையில் இரண்டு பெண்கள் விலைகொடுத்து மதுபானத்தை வாங்கி அதனை சாக்கடையில் கொட்டினர். இதுகுறித்து அந்த அமைப்பை சேர்ந்த ஜோதி என்பவர் கூறியது: தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். 

கடந்த 40 நாள்களில் மதுக்கடைகள் இல்லாததால் பெண்கள் நிம்மதியாக இருந்தனர். மதுபானம் என்பது சாக்கடை தண்ணீருக்கு நிகரானது. அதனை நிரூபிக்கவே மதுபானத்தை சாக்கடையில் ஊற்றியுள்ளோம். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மேலும் கரோனாவிற்கு சாப்பிடக்கூடிய மருந்தை மதுபானம் அருந்துவோர் சாப்பிட்டால் அதிக பாதிப்பை உண்டாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

தமிழக அரசு கரோனா காலத்தில் மதுக்கடைகளைத் திறந்தது தவறானது உடனடியாக அடைக்க வேண்டும் என்றார். போராட்டத்தில் அமுதா, ஜெகதீஸ்வரி, மக்கள் பாதை ருங்கிணைப்பாளர் அருண் அய்யனார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.