தற்போது அதற்கான முழு அனுமதியை மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளதால், தமிழ்நாடு சித்த மருத்துவ கழககத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, மாத்திரைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில், ஏற்கெனவே 21 கரோனா தடுப்பு கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அந்தந்த பகுதி நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், அரசுத் துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 14 சோதனைச் சாவடிகளிலும் லாரி ஓட்டுநர்கள், அவர்களது குடும்பத்தினர் நோய் தொற்றால் பாதிப்படையாத வகையிலும் 15 நாள்களுக்கு தேவையான கபசுரக் குடிநீர், ஆரோக்ய அஸ்பரிசம், ஜிங்க் சல்பேட் போன்றவை பொட்டலங்களாக கட்டப்பட்டு வழங்கப்பட உள்ளது.