6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தற்போதைக்கு ஆன்லைனில் மதுபானம் விற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு

ஆன்லைனில் தற்போதைக்கு மதுபானம் விற்பனை செய்வது இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதத்தை முன்வைத்துள்ளது.

News image
Updated On :15 மே 2020, 6:55 am

DIN


புது தில்லி: ஆன்லைனில் தற்போதைக்கு மதுபானம் விற்பனை செய்வது இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதத்தை முன்வைத்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் தற்போதைக்கு ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்ய இயலாது. மேலும், ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்தால், மதுக்கடத்தல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலும், மது விற்பனைக்காக டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மதுவாங்க வருவோர் ஆதார் அட்டை கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.