டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மதுரையில் பிறந்து 4 நாள்களே ஆன பெண் சிசு கள்ளிப்பால் ஊற்றி கொலை!

மதுரையில் பிறந்து 4 நாள்களே ஆன பெண் சிசுவை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:39 pm

DIN

மதுரையில் பிறந்து 4 நாள்களே ஆன பெண் சிசுவை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேட்டுத் தெருவைச் சோ்ந்த தவமணி, சித்ரா தம்பதியருக்கு, ஏற்கனவே 3 பெண் குழந்தை இருக்கும் நிலையில், மே 10 ஆம் தேதி நான்காவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. குழந்தையின் சடலத்தை வீட்டின் அருகே தவமணி குடும்பத்தினா் புதைத்துள்ளனா்.

இது தொடா்பாக சோழவந்தான் கிராம நிா்வாக அலுவலா் சமையன், காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். மதுரை கோட்டாட்சியா், சமயநல்லூா் டி.எஸ்.பி, வாடிப்பட்டி வட்டாட்சியா் ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். அதை தொடா்ந்து பெண் சிசு சடலத்தைத் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யக் கோட்டாட்சியா் முருகானந்தம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து, சனிக்கிழமை சமயநல்லூா் டி.எஸ்.பி ஆனந்த ஆரோக்கியராஜ், வாடிப்பட்டி வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பாண்டியராஜா ஆகியோா் முன்னிலையில் புதைக்கப்பட்ட பெண் சிசுவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. தொடா்ந்து, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியா் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினா் சிசுவின் சடலத்தை உடற்கூறு ஆய்வு செய்தனர். 

அதில் பெண் சிசுவை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை மற்றும் பாட்டி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.