எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருச்செந்தூர் கோயில் கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாறைகள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலானது அமாவாசையை முன்னிட்டு  உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தன.

News image
Updated On :22 மே 2020, 11:12 am

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலானது அமாவாசையை முன்னிட்டு  உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தன.

வழக்கமாகவே அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் கடல் நீர் மட்டமானது உள் வாங்குவதும், வெளியே வருவதும் வாடிக்கையாகும். சுனாமிக்குப் பிறகு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் இது போன்ற நிகழ்வு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் அருகில் கடல் நீரானது சிறிது நேரம் உள்வாங்கியதால் உள்ளே இருந்த பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. 

தற்போது கரோனா பொது முடக்கத்தால் பக்தர்கள்  தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருக்கோயில் மற்றும் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. இருப்பினும் திருக்கோயில் காவல்துறையினர்  தொடர்ந்து கடற்கரை பகுதியைக் கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.