மேல் விஷாரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மேல் விஷாரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேல் விஷாரம்


மேல் விஷாரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யப் பரிந்துரைக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும் இலவச மின்சாரம் விவசாயிகளுக்குத் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மேல்விஷாரம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் புறவழிச்சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கே ஓ .நிஷாத் அகமது தலைமையில் தனிமனித இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் சி. பஞ்சாட்சரம் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். இதில் காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் ஆற்காடு திமிரி கலவை உள்ளிட்ட மின்வாரிய அலுவலகம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...