மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அபிராமம் காவல் ஆய்வாளரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

அபிராமம் காவல் ஆய்வாளரைக் கண்டித்து நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் நிறுவனர் காவல் நிலையம் எதிரே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். 

News image

அபிராமம் காவல் ஆய்வாளரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் நிறுவனர்

Updated On :6 நவம்பர் 2020, 11:36 am

அபிராமம் காவல் ஆய்வாளரைக் கண்டித்து நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் நிறுவனர் காவல் நிலையம் எதிரே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். 

தேவர் குருபூஜை விழாவின் போது மாவட்ட நிர்வாகத்தின் தடைகளை மீறி செயல்பட்டதாக அபிராமம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து வருகின்றனர். இந்நிலையில் வலசை கிராமத்தில் நள்ளிரவில் பெண்கள், குழந்தைகளை துன்புறுத்தி, இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்குவதாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் என்.மகாராஜன் அபிராமம் காவல் ஆய்வாளர் ஜான்சி ராணியை கண்டித்து அபிராமம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இவருடன் சேர்த்து வலசை கிராமத்தைச் சேர்ந்த 35 பெண்கள் உள்பட 36 பேர் அபிராமம் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.